தளபதி வரவில்லை என்றால் கண்டிப்பாக அவர்தான்!! பிரபல திரையங்கு உரிமையாளர் வெளியிட்ட பதிவால் ஷாக்கான ரசிகர்கள்!! - Seithipunal
Seithipunal


கடந்த 19 ஆம் தேதி நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது.மேலும்  தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் மற்றும் 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி  நடைபெற்றது.

இந்நிலையில் நேற்று (மே 23) நாடு முழுவதும் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியது. இதில் இந்திய அளவில் பாஜக கூட்டணி 350 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 92இடங்களிலும், பிற கட்சிகள் 100இடங்களிலும் வெற்றி பெற்றது. 

மேலும் தமிழகத்தில் 37 இடங்களில் திமுக மாபெரும் வெற்றி பெற்று முன்னணி வகித்தது. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்ட நடிகர் கமலின்  மக்கள் நீதி மய்யம் கட்சி பெரும்பான்மையான தொகுதிகளில் 3 மற்றும் 4 வைத்து இடம் பெற்று பின்னடைவு அடைந்தது.

இவ்வாறு இந்தியாவே தேர்தல் முடிவால் பரபரப்பில் உள்ளநிலையில் ரஜினிகாந்த் மற்றும் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து சென்னை ரோகிணி திரையரங்கு உரிமையாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதில் அவர், தளபதி அரசியலுக்கு வரவில்லை என்றால் நான் அடுத்த சட்டமன்ற தேர்தலில் ரஜினியை எதிர்பார்க்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rohini theatre owner tweet about vijay in politics


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->