உலகையே சிரிக்கவைத்த இமான் அண்ணாச்சியை.,அழவைத்த நிகழ்வு!! களமிறங்கிய காவல்துறை!!
robbery in imman annachi
அரும்பாக்கம் ராஜீவ்காந்தி தெருவில் நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சி குடும்பத்துடன் வசித்து வருகிறார். சினிமா படப்பிடிப்புக்காக அடிக்கடி அவர் சென்று விடுவது வழக்கம். கோடை விடுமுறை காரணமாக, அவர் தன் மனைவி மற்றும் மகள் சொந்த ஊருக்கு சென்று உள்ளனர்.
இமான் அண்ணாச்சியின் தம்பி மற்றும் குடும்பத்தினருடன் இருந்துள்ளனர். இந்நிலையில், படப்பிடிப்பு முடிந்து இமான் அண்ணாச்சி வீட்டிற்கு திரும்பிய பொழுது பீரோவின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்து 45 பவுன் நகை திருட்டு போய் இருப்பது தெரிந்தது.
கள்ளச்சாவி உபயோக படுத்தி இருக்கலாம் என தெரிகிறது. இது குறித்து இமான் அண்ணாச்சி அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். காவல்துறையினரும் விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பீரோவில் பூட்டு உடைக்கப்படாமல் இருந்ததால் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் நபர்கள் திருடி இருக்கலாம் என சந்தேகப்படுகின்றனர். இது தொடர்பாக அதே பகுதியில் சேர்ந்த இரண்டு பெண்களிடம் விசாரணை நடந்து வருகிறது. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.