பலதரப்பட்ட பேச்சுவார்த்தை.. நிபந்தனை.. ஆர்.கே.செல்வமணி பேட்டி.!!
RK Selvamani Latest Press meet
திரைப்பட தொழிலாளர்கள் சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், திரைத்துறையை முடங்கியது இது தான் முதல் முறை.. வேலைநிறுத்தம் போன்று அறிவிப்புகள் இருந்தாலும், மறைமுகமாக பல வேலைகள் அமைதியாக நடைபெற்று வரும். திரைத்துறையை முழுவதுமாக முடங்கியுள்ளது. இது உலகளவிலான பாதிப்பு.
பலதரப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் படப்பிடிப்பிற்கு 60 பேரை வைத்து படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு குழுவில் பணியாற்றி வரும் நபர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய நிபந்தனைகள் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசிற்கு முழு ஒத்துழைப்பு அளித்து, முன் அனுமதி பெற்று எடுக்கப்படும் சூழல் இருக்கிறது. படப்பிடிப்பில் பணியாற்றும் நபர்கள் ஒரு குழுவில் 60 பேர் என்றால், அவர்களை வைத்து மட்டுமே படப்பிடிப்பு நடத்த வேண்டும். ஆட்கள் மாற்றம் இருக்கும் பட்சத்தில், அது குறித்து தகவல் தெரிவிக்கப்பட வேண்டும். நடிகர், நடிகைகள் பிற மாநிலங்களில் இருந்து வரும் பட்சத்தில் தனிமைப்படுத்துதல் போன்றவை குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என்ற பல நிபந்தனைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்..
Tamil online news Today News in Tamil
English Summary
RK Selvamani Latest Press meet