ரங்கராஜ் பாண்டேவின் திடீர் மாற்றம்..! களத்தில் இறங்கி கலக்கும் பாண்டே..!
rangaraj pandey entry in cinema industry
செய்தி தொலைக்காட்சியில் பணிபுரிந்து பின் நடிகராக களமிறங்கி நடிப்பில் அசத்தி வருகிறார் ரங்கராஜ் பாண்டே. இவர் ஒரு முன்ணணி செய்தி தொகுப்பாளராக பணிபுரிந்து வந்தவர். பல அரசியல் பிரமுகர்களையும், அரசியல் தலைவர்களையும் தனது கேள்வி திறன் மூலம் கிறங்கடித்தவர். தற்போது அவர் நடிப்பில் களமிறங்கியுள்ளார்.
இதை தொடர்ந்து, அவர் முதன்முதலாக நடித்த படம் நேர்கொண்ட பார்வை. இந்த படத்தை தொடர்ந்து மேலும் தமிழ் திரை படங்களில் நடிப்பார் என்று பார்த்தால் அப்படியே ஹிந்தியில் களமிறங்க இருக்கிறார், ஆம் இவருக்கு ஹிந்தியில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இயக்குனர் சுசி கணேசன் தமிழில் இயக்கிய திருட்டுப் பயலே படத்தை இந்தியில் இயக்கினார்.
இதை தொடர்ந்து, அடுத்து திருட்டுப் பயலே 2 படத்தை தமிழில் இயக்கிய அவர் இந்த படத்தையும் ஹிந்தியில் இயக்க இருக்கிறார். இந்த படத்தில், தமிழில் சுசி கணேசன் நடித்த கதாபாத்திரத்தில் ரங்கராஜ் பாண்டே நடித்துள்ளாராம்.
English Summary
rangaraj pandey entry in cinema industry