'ஹீரோவா மட்டும் நடிப்பேன்னு சொன்னதே இல்ல' உண்மையை உடைத்த ராமராஜன்.!
Ramarajan In samaniyan press meet
90 காலகட்டங்களில் கிராம கதைகள் என்றாலே நடிகர் ராமராஜன் தான் அனைவரது நினைவுக்கும் வருவார். அந்த அளவிற்கு அவரது கிராமத்து கதைகள் ஹிட்டாகியுள்ளன. அவரது கரகாட்டக்காரன் திரைப்படம் திரையரங்குகளில் மாத கணக்கில் ஓடியது குறிப்பிடத்தக்கது. ஹீரோவாக மட்டும் சினிமாவில் நடித்து வந்த அவருக்கு ஹீரோ வாய்ப்பு அமையாததால் சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.
அவர் மீண்டும் படத்தில் நடிக்க மாட்டாரா என்பது ரசிகர்களின் ஏக்கமாக இருந்த நிலையில், தற்போது சாமானியன் என்ற படத்தில் ஹீரோவாக ராமராஜன் நடித்து கம்பேக் கொடுத்துள்ளார். இந்த படத்தில் ராமராஜனுடன் சேர்ந்து எம்எஸ் பாஸ்கர், ராதாரவி உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர். பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் சாமானியன் ஐந்து மொழிகளில் வெளியாகும் என பட குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ராமராஜன், "மக்கள் நாயகன் என்று நான் பெயர் எடுத்தவன். எனவே மக்களுக்கு பயன் தருகின்ற படங்களில் மட்டும் தான் நான் நடிப்பேன். தரமற்ற படங்களில் நடிப்பதற்காக எனக்கு கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன்.
நடித்தால் ஹீரோவாக தான் நடிப்பேன் என்று நான் எங்குமே கூறியது இல்லை. ஆனால் நான் சொல்லியதாக அப்படி ஒரு செய்தி பரவியது. சரி அதுவும் நியாயம் தான் என்று நான் அமைதியாக இருந்து விட்டேன்." என்று பேசியுள்ளார்.
English Summary
Ramarajan In samaniyan press meet