சாத்தான்குளம் விவகாரம்.. உச்சக்கட்ட கொந்தளிப்பில் நடிகர் ரஜினிகாந்த்.!!
Rajinikanth twit about Sathankulam murder case
நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் ஆனது, பல தரப்பிலிருந்தும் காவல்துறைக்கு கண்டனங்களை பெற்று வருகிறது. தந்தை, மகனின் மரணத்திற்கு பல தரப்பில் இருந்து நீதி கேட்டு போராட்டங்கள் மற்றும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கைகள் அடுத்தடுத்து வலுத்து வந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணையை சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதாக முதல்வர் அறிவித்தார். மேலும், ஜெயராஜ், பெனிக்ஸ் உடலில் அதிக காயங்கள் இருப்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
இந்த விஷயம் தொடர்பான விசாரணையில் பல சர்ச்சை கருத்துக்கள் மற்றும் பகீர் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது கண்டனத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இது குறித்த ட்விட்டர் பதிவில், " தந்தையும் மகனையும் சித்திரவதை செய்து மிருகத்தனமாக கொன்றதை, மனித இனமே எதிர்த்து கண்டித்து பிறகும், காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும், பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆகவேண்டும். விடக்கூடாது... சத்தியமா விடவே கூடாது " என்று கூறியுள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Rajinikanth twit about Sathankulam murder case