இன்று அலை.. நாளை சுனாமி.. எல்லாம் அவன் செயல்.. ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு.!! - Seithipunal
Seithipunal


திரையுலகின் உச்சநட்சத்திரமான ரஜினிகாந்த் எப்போது அரசியலுக்கு வருகை தருவார்? என்ற கேள்விக்கு பதில் கூறும் விதமாக கடந்த 12 ஆம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். இதில் தமிழகத்தில் புரட்சி ஏற்பட வேண்டும் என்றும், தேர்தல்களில் போட்டியிடுவதற்கு இளைஞர்களுக்கு அதிகளவு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். 

மேலும், கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு மற்றொரு தலைமை இருக்க வேண்டும் என்றும், எந்த காரணத்தினாலும் தான் முதல்வராக மாட்டேன் என்று தெரிவித்து மூன்றம்ச அறிவிப்பை வெளியிட்டு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தினார். தனது கருத்துக்கள் அனைத்தையும் மக்களின் மத்தியில் கொண்டு செல்ல உதவி செய்துள்ள ஊடகம் மற்றும் பத்திரிகை, சமூக வலைத்தளங்களிற்கு நன்றி என்று தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்திலும் இதற்கான பதிவை பதிவு செய்திருந்தார்.

நேற்று முன்தினம் செய்தியாளர்களை போயஸ் கார்டனில் வைத்து சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், தனது கருத்துக்கள் பாமர மக்களிடம் சென்று உள்ளது என்றும், அடுத்தகட்ட நடவடிக்கையாக எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்றும் தெரிவித்தார். இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பேசியது மீண்டும் வைரலாகியுள்ளது. 

இது தொடர்பாக ரஜினி பேசுகையில், அரசியலில் நேரம் தான் முக்கியம்.. அலை வரவேண்டும்.. இன்று உருவாகியிருக்கும் அலை, தேர்தல் சமயத்தில் சுனாமியாக மாறும். அப்போது அதிசயமும் அற்புதமும் நடக்கும். நான் வைத்த அரசியல் புள்ளி சுழலாகி, அலையாகியுள்ளது. அதனை வலிமையாக வேண்டும்.. அந்த அலை கரையை தொடும் போது சுனாமியாகும். இது ஆண்டவன் கையில் உள்ளது.. அது மக்கள் கையில் உள்ளது என்று பேசினார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajinikanth speech about peoples revolution and Returns like a Tsunami


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->