எனக்கும் - பாரதிராஜாவுக்கு உள்ள நட்பு எப்போதும் தொடரும்..! அவர் என்ன வேண்டுமென்றாலும் சொல்லட்டும்..!! ரஜினிகாந்த்.!!
rajinikanth speech about bharathiraja friendship
சென்னை கதாசிரியர் கலைஞானத்திற்கு பாராட்டு விழாவானது நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட பல திரையுலகினர் விழாவை சிறப்பித்து பேசிய நிலையில்., சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது., திரைத்துறைக்கு பலரை அறிமுகம் செய்து பெரிய பெயர்களை பெற்று தந்த கலைஞானம் வாடகை வீட்டில் வசித்து வந்த தகவல் எனக்கு இப்போதுதான் தெரியும். இந்த செய்தி எனக்கு மிகவும் வருத்தமடைய செய்தது. கலைஞானத்திற்கு நானே புதிய வீடொண்டரை வாங்கி தருகிறேன்.
தமிழ் திரையுலகில் கதாசிரியர்களுக்கு உரிய மரியாதையை கட்டாயம் வழங்க வேண்டும். கலைஞானம் குறித்து அறியாத நபர்களே திரைத்துறையில் இல்லை என்று தான் கூற வேண்டும். திரைப்படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் ஏற்படும் கதை பிரச்னையை சரி செய்ய கலைஞானத்தை மட்டுமே அழைப்பார்கள்.
திரையில் படம் ஒளிபரப்பாகும் போதும் பிற நிகழ்வின் போதும் தயாரிப்பார் மற்றும் இயக்குனர்களின் வரிசையில் கதாசிரியர்கள் பெயர்களும் முன்னிலை படுத்த வேண்டும். இயக்குனரான பாரதிராஜா தனிமையில் என்னை சந்தித்தால் தலைவர் என்று அழைப்பார்.. அவர் என்ன கூறினாலும் எனக்கும் - பாரதிராஜாவுக்கும் உள்ள நட்பு என்றும் மாறாது.
கதாநாயகனாக இருக்க வேண்டும் என்று நான் எண்ணியதே இல்லை.. கெத்தான பைக் மற்றும் வீடு என்று குடும்பத்துடன் சந்தோசமாக இருக்க ஆசைப்பட்டேன். நான் வில்லனாக நடித்த சமயத்தில்., கதாநாயகனுக்கு அழைப்பு வந்ததும் அதிர்ச்சியடைந்தேன்... ஆனால் எனது ரசிகர்களால் எனக்கு சூப்பர்ஸ்டார் பட்டம் கொடுக்கப்பட்டது. பைரவி படத்திற்கு பின்னர் நானும் - கலைஞானமும் இணைத்து பணியாறற இயலவில்லை என்று தெரிவித்தார்.
Tamil online news Today News in Tamil
English Summary
rajinikanth speech about bharathiraja friendship