காட்டுக்கு சென்று வந்து நன்றி தெரிவித்த ரஜினி.. வச்சி செய்த நெட்டிசன்கள்..!! - Seithipunal
Seithipunal


சென்னையில் இருந்து பெங்களூருக்கு ஒரு சிறிய ரக விமானம் புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட 48 பயணிகள் பயணம் செய்தனர். அந்த விமானம் புறப்பட சில மணி நேரத்திலேயே சென்னை விமான நிலையத்திற்கு திரும்ப வந்துள்ளது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானத்தை அவசர அவசரமாக தரையிறக்கி, பின்னர் விமானத்தின் கோளாறு சரி செய்யப்பட்டது. இதன் பின்னர் பெங்களூருக்கு புறப்பட்டு சென்ற நடிகர் ரஜினிகாந்த் மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 

இந்த நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பின் போது ரஜினிகாந்திற்கு காயம் ஏற்பட்டதாகவும், இதனால் படப்பிடிப்பு ரத்தாகியுள்ளது என்றும் அடுத்தடுத்து உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியானது. 

இரண்டு நாட்கள் முழுவதும் படப்பிடிப்பில் கலந்து கொண்ட பின்னர் ரஜினிகாந்த் மீண்டும் சென்னைக்கு திரும்பிய நிலையில், விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். 

இந்த சந்திப்பில் தனக்கு ஒன்றும் ஆகவில்லை என்றும், காலில் சிறிய முள் மட்டுமே குத்தியது, இதனைப்போன்று காலில் கொஞ்சம் சிராய்ப்புகள் உள்ளது என்று தெரிவித்தார். இந்த நிலையில், உண்மையை அறியாத பல நபர்கள் கேலியாக பேசவே, சதுரங்கவேட்டை கதாநாயகன் பதிவு செய்த ட்விட் பெரும் வைரலானது.  இதனைப்போன்று பல புகைப்படங்கள் மற்றும் மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajinikanth says thanks for rajinikanth


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->