தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களுடன், அன்பான கோரிக்கை வைத்துள்ள நடிகர் ரஜினிகாந்த்.!! - Seithipunal
Seithipunal


கரோனா வைரஸின் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலாகியுள்ளது. இந்த ஊரடங்கு முதலில் ஏப்ரல் 14 வரையிலான 21 நாட்களுக்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், இந்த ஊரடங்கு உத்தரவு வரும் மே மாதம் 3 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டது. 

இந்த அறிவிப்பை வெளியிட்ட மோடி, நாட்டு மக்களிடையே உரையாற்றுகையில் பல விழிப்புணர்வுகளை தெரிவித்தார். மேலும், வரும் ஒரு வாரம் நாம் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கத்திற்கு தற்போது வரை 10,383 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 1036 பேர் பூரண நலன்பெற்று இல்லங்களுக்கு திரும்பியுள்ளனர். தற்போது வரை 236 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 

கரோனா வைரஸ் தொடர்பாகவும், விழிப்புணர்வு தொடர்பாகவும் பல நடிகர் நடிகைகள் தொடர்ந்து விடியோவாக பதிவு செய்து வந்தனர். இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். 

இந்த வீடியோ பதிவில், கரோனா வைரசால் உலகமே பாதிக்கப்பட்டுள்ளது, கரோனா வைரஸின் தாக்கத்திற்கு எந்த நாடும் வரைமுறை கிடையாது. பிற நாடுகளில் வாழும் தமிழர்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். உங்களின் குடும்பத்தாருக்கு எந்த சமயத்திலும் உங்கள் தொடர்பான சிந்தனைதான். நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும், அந்த நாட்டின் சட்டத்திட்டத்தை கடைபிடித்து பாதுகாப்பாக இருங்கள்.. இந்த வருடம் இனிய வருடமாக அமையும்.. இதுவும் கடந்து போகும்.. என்று கூறியுள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajinikanth new year wish and corona awareness video


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->