யாருக்கு என் ஆதரவு? சற்றுமுன் ரஜினிகாந்த பரபரப்பு பேட்டி.!!  - Seithipunal
Seithipunal


திரையுலகின் உச்ச நட்சத்திரமாக இருந்து வரும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் தர்பார் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை லைக்கா ப்ரொடக்ஷன் நிறுவனமானது தயாரித்து வருகிறது. 

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க., கதாநாயகியாக நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளார். மேலும்., திரையுலக பிரபலங்கள் பலர் இந்த திரைப்படத்தில் நடிக்க உள்ளனர். இந்த படத்தின் ஒளிப்பதிவு பணியை சந்தோஷ் சிவன் மேற்கொள்கிறார். 

இந்த படத்தின் முதற்பார்வை இன்று காலை வெளியான நிலையில்., ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில்., நடிகர் ரஜினிகாந்த் பத்திரிகையாளர்களை தற்போது சந்தித்துள்ளார். 

தற்போது இந்திய முழுவதும் பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதை அடுத்து., அந்தந்த மாநிலத்தில் உள்ள நடிகர்களை அரசியல் வாதிகள் சந்தித்து ஆதரவு கேட்பதும்.,சில நடிகர்கள் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரத்தில் ஈடுபடுவதும் வழக்கம். 

அந்த வகையில்., தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளில் பெரும்பாலான கட்சிகளில் உள்ள நபர்கள் நடிகர் ரஜினிகாந்தை சந்திப்பது வழக்கம். ஆனால் ரஜினி கடந்த சில வாரங்களுக்கு முன்னதாகவே., பத்திரிகையாளர் சந்திப்பில் நல்ல நபருக்கு வாக்குகளை செலுத்துங்கள் என்றும்., இந்த பாராளுமன்ற தேர்தலில் எனது ஆதரவு யாருக்கும் இல்லை என்று தெரிவித்தார். 

இந்த நிலையில்., கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நடிகர் கமல்., நான் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசிய போது அவர் எனக்கு ஆதரவு தெரிவிப்பதாக தெரிவித்தார்., அவரது ஆதரவு எனக்குத்தான் என்று கூறினார். இந்த சமயத்தில்., தற்போது பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தது சிலருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த பேட்டியில்., அரசியலில் எனது நிலைப்பாடு குறித்த தகவலை நான் ஏற்கனவே தெரிவித்துவிட்டேன்., அந்த நிலைப்பாட்டில் இருந்து நான் மாறப்போவதும் இல்லை., அதில் எந்த விதமான மாற்றமும் இல்லை., எனக்கும் எனது தோழரான கமலுக்கும் இடையான நட்பை நீங்களே கெடுத்து விடாதீர்கள் என்றும்., பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையில் வெளியான நதிகளை இணைப்போம் வாக்குறுதியை நான் ஆதரிக்கிறேன். 

இந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியானது வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தால்., இந்த திட்டத்தை செயல்படுத்த கூறி அவர்களை வலியுறுத்துவேன்., இந்திய நதிகளை இணைத்துவிட்டால் பல இடங்களில் உள்ள பெரும்பாலான தண்ணீர் பஞ்சம் பிரச்சனை மற்றும் விவசாயத்தில் தண்ணீர் இல்லாமல் ஏற்படும் பிரச்சனையை தீர்த்து விடலாம்., மக்களும் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்.

மேலும்., இந்த சமயம் தேர்தல் நேரம் என்பதால் இது குறித்து மேலும் பேசுவதற்கு விரும்பவில்லை என்றும்., இன்று வெளியான தர்பார் படத்தின் முதற்பார்வையை ரசிகர்கள் அதிகளவு வரவேற்றனர்., அனைவரும் நன்றாக உள்ளது என்று தெரிவித்தனர் என்று கூறினார்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajinikanth latest press meet about parliament election supporting party and darpar first look


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->