#Breaking: கந்தசஷ்டி விவகாரம்.. ரஜினி ஆவேசமாக கொந்தளிப்பு...!!
Rajinikanth Condemned about Kanthasasti Kavasam Issue
கறுப்பர் கூட்டம் என்று யூடியூப் சேனல் ஆனது கந்த சஷ்டி கவசம் குறித்து ஆபாசமாக விமர்சனம் செய்த வீடியோவானது வைரலானது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் உருவாக யூடியூப் சேனலை நடத்துபவர்கள் மீது வழக்குகள் பாய்ந்தது.
கறுப்பர் கூட்டம் ஊழியர்கள் அனைவரும் தலைமறைவான நிலையில், சில நாட்களுக்கு முன் செந்தில் வாசன் என்பவரை வேளச்சேரியில் கைது செய்தனர். ஆபாசமாக விமர்சனம் செய்த சுரேந்திரன் சென்னையிலிருந்து பாண்டிச்சேரி தப்பிச்சென்று அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் சரணடைந்த நிலையில்,15 நாள் நீதிமன்ற காவலில் இருந்து வருகிறார்.
கறுப்பர் கூட்டத்து ஊழியர்களான ஓட்டேரியை சேர்ந்த சோமசுந்தரம் மற்றும் மறைமலைநகரை சேர்ந்த குகன் ஆகிய 2 பேரையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனலை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், 500 க்கும் அதிகமான விடியோக்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பதிவில், " கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து, பல கோடி தமிழ் மக்களின் மனதை புண்படுத்தி கொந்தளிக்கச் செய்த, இந்த ஈனச்செயலை வாழ்க்கையில் மறக்க முடியாத படி செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதாக தமிழக அரசுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள். இனிமேலாவது மதத்துவேஷமும், கடவுள் சிந்தனையும் ஒழியட்டும். ஒழியனும். எல்லா மதமும் சம்மதமே!!! கந்தனுக்கு அரோகரா!!! " என்று கூறியுள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Rajinikanth Condemned about Kanthasasti Kavasam Issue