ரஜினியின் அடுத்த படத்தில் இரண்டு கதாநாயகிகள்.! வெளியான தகவல்.!! - Seithipunal
Seithipunal


இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் பேட்ட. இந்த திரைப்படத்தை சன்குழுமம் தயாரித்திருந்தது. இந்த படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இருந்த அனைத்து பாடல்களும்., ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில்., இந்த படத்தில் இருந்த பேட்ட வேலன் கதாபாத்திரத்தின் தீம் இசையானது பெரும் வைரலாகியது. 

இந்த படத்தின் வெற்றிக்கு அடுத்தபடியாக., இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க ஒப்பந்தமாகினர். இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யவுள்ளதாக தகவல் வெளியானது. இந்த படத்திற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ள நிலையில்., இந்த படத்திற்கும் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கான 45 நாட்கள் கால்சீட்டை நடிகர் ரஜினிகாந்த வழங்கியுள்ள நிலையில்., இந்த படத்தின் படப்பிடிப்பானது மும்பையில் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில்., இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் காவல் அதிகாரி மற்றும் சமூக ஆர்வலர் என்ற இரண்டு கதாபாத்திரத்தில் நடிப்பதாக செய்திகள் தொடர்ந்து பரவிய வண்ணம் இருந்தது. 

இந்த செய்தியை கவனித்த படக்குழுவானது ரஜினி இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை என்றும்., ஒரேயொரு கதாபாத்திரத்தில் மட்டுமே நடிக்கிறார் என்றும் தெரிவித்துள்ளது. இந்த நிலையில்., தற்போது நடிகர் ரஜினியுடன் நடிகை நயன்தாரா மற்றும் கீர்த்திசுரேஷ் நடிக்க விருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் இன்னும் உறுதி படுத்தப்படாத நிலையில்., விரைவில் உறுதிப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajini next movie will commit two heroines


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->