அரசியல் கட்சி, படபிடிப்பெல்லாம் பயம்.. ஆனா, ரஜினியால் கடுப்பான ரசிகர்கள்.!  - Seithipunal
Seithipunal


இசைஞானி இளையராஜா இன்று தன்னுடைய புதிய ஸ்டூடியோவை திறந்து இருக்கிறார். இந்த ஸ்டுடியோவுக்கு பார்வையிட வந்த ரஜினிகாந்த் இளையராஜாவுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை கூறியுள்ளார். 

சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் தனக்கான அறையில் படங்களுக்கு இசையமைத்து வந்த இளையராஜா நிர்வாகத்திற்கும், இளையராஜாவுக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஸ்டுடியோவுக்குள் அவரை அனுமதிக்க நிர்வாகிகள் மறுப்பு தெரிவித்தனர். 

இதனால் நீதிமன்றத்தில் இசைஞானி இளையராஜா வழக்கு தொடர்ந்து இருந்த நிலையில், மொத்தமாக அவரது பொருட்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

இத்தகைய சூழலில் சென்னை கோடம்பாக்கம் பாலத்திற்கு அருகில் புதிய ஸ்டூடியோவை இளையராஜா அமைத்துள்ளார். இந்த ஸ்டுடியோவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வருகை புரிந்து மிகவும் ஆர்வத்துடன் சுற்றி பார்த்து ஸ்டுடியோவை பாராட்டிவிட்டு இளையராஜாவுக்கு தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். 

இந்த ஸ்டுடியோவுக்கு வந்ததும் கோவிலுக்குள் வந்தது போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajini in elayaraja studio


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->