வறுமையில் இருந்த தயாரிப்பாளருக்கு ரூ.1 கோடியில் வீடு வாங்கி தந்த ரஜினி!!
rajini helps to producer
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர் மற்றும் கதாசிரியராகவும் இருந்தவர் கலைஞானம், இவருக்கு சமீபத்தில் திரையுலகினர் பாராட்டு விழா நடத்தினர், இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், சிவகுமார், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கலைஞானம் குறித்து நடிகர் சிவகுமார் பேசியபோது, கலைஞானம் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அவருக்கு சொந்த வீடு கட்டுவதற்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என கூறினார். இதையடுத்து பேசிய நடிகர் ரஜினிகாந்த், கலைஞானத்துக்கு வீடு கட்டி தரும் வாய்ப்பை அரசுக்கு தரமாட்டேன். விரைவாக கலைஞானம் அவர்களுக்கு வீடு வாங்கி தருகிறேன் பாருங்கள். மேலும் 10 நாட்களுக்குள் பணத்தை தருகிறேன் என்றும் கூறினார்.
இதைத்தொடர்ந்து, இயக்குனர் பாரதிராஜா 1 கோடி ரூபாய் மதிப்பிலான வீடு ஒன்றை தேடிப்பிடித்ததகாவும், ரஜினி மொத்த பணத்தையும் தந்து அந்த வீட்டை கலைஞானத்துக்கு பெற்று கொடுத்துள்ளதாகவும் தகவல் பரவியது. ஆனால் விசாரித்தால் வீடு தேடிக்கொண்டு இருப்பதாகவும் தகவல் வருகிறது. ரஜினி இந்த வீட்டுக்காக 1 கோடி ரூபாய் கூட கொடுக்க தயார் என்று கூறியதாகவும் சொல்கிறார்கள்.
இது குறித்து கலைஞானம் கூறுகையில், ரஜினிக்கும் எனக்கும் ஒட்டுமில்லை உறவுமில்லை. அவருடைய முதல் பட வாய்ப்பை நான் அளித்தேன். அவ்வளவுதான். ஆனா எனக்கு எவ்வளவு பெரிய உதவியை ரஜினி செய்துள்ளார். இது அவருடைய பெரிய மனதை வெளிப்படுத்துகிறது, என்று நெகிழ்ந்து பேசினார். ரஜினி நடித்து பெரிய வசூலை பெற்ற அருணாச்சலம் திரைப்படத்தில் தனது லாபத்தில் ஒரு பங்கை கலைஞானத்துக்கு அளித்து அவரது வாழ்வை சரிவிலிருந்து ரஜினி மீட்டார்.