அந்த ரெண்டு பேரை ரெடியா இருங்கனு சொன்ன ரஜினி.! விரைவில் வெளியாகவுள்ள அறிவிப்பு.!
rajini getting ready for next 2 movies
கொரோனா வைரஸ் ஊரடங்கினால் தமிழகத்தில் படப்பிடிப்புக்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் முதல் தமிழகத்தில் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது. ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வந்த நிலையில், பட குழுவிலிருந்த ஒரு சிலருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்ட காரணத்தால், உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து, படப்பிடிப்பில் நடித்து வந்த ரஜினி அவரது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். அவருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்ட போதும் தொற்று ஏற்படவில்லை என்று கூறப்பட்டாலும், அவருடைய ரத்த அழுத்தம் அதிகரித்து இருந்ததாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை எடுத்துக் கொண்ட ரஜினி உடல்நிலை காரணமாக தனது அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முடிவை நிரந்தரமாக நிறுத்தி விட்டார்.
இந்த நிலையில், மீண்டும் படப்பிடிப்பை துவங்க இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகியது. மார்ச் மாதத்தில் அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்துகொள்ள ரஜினி பட குழு கோரிக்கை வைத்துள்ளதாகவும் அதற்கு ரஜினி பதிலளிக்கவில்லை என்றும் கூறப்பட்டது.
ஆனால், தற்போது ரஜினியின் புதிய படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகி ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது. சமீபத்தில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி தனது திருமணப் பத்திரிக்கையை கொடுக்க ரஜினியை பார்க்க சென்றதாக கூறப்பட்டது. அது உண்மை என்றாலும் கூட அதற்காக மட்டும் ரஜினியை சந்திக்கவில்லையாம்.
இத்தகைய சூழலில், நடிகர் ரஜினி அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது 169 திரைப்படத்தை நடிக்க இருப்பதாகவும், அடுத்ததாக கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்பட இயக்குனர் தேசிங்கு பெரியசாமியை தனக்காக ஒரு கதை தயார் செய்து வைக்குமாறும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்ணாத்தா திரைப்படமே முழுதும் வேலை முடியாத நிலையில் அடுத்ததாக அவர் இந்த இரண்டு நடிகர்களை தயாராக இருக்கச் சொல்லி இருப்பது அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கி உள்ளது.
English Summary
rajini getting ready for next 2 movies