அனைத்து படப்பிடிப்புகளுக்கும் விடுமுறை.! இளையராஜாவிற்காக தயாரிப்பாளர் சங்கம் விடுத்த அதிரடி அறிவிப்பு.!
அனைத்து படப்பிடிப்புகளுக்கும் விடுமுறை.! இளையராஜாவிற்காக தயாரிப்பாளர் சங்கம் விடுத்த அதிரடி அறிவிப்பு.!
தமிழில் ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு இசையமைத்தும், நூற்றுக்கணக்கான பாடல்களை பாடியும், தனக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தையே வைத்திருப்பவர் இசைஞானி இளையராஜா. இவரது இசைக்கு மயங்காதவர்களே இல்லை என சொல்லலாம்.
இவ்வாறு இசைஞானி இளையராஜாவை பெருமைப்படுத்தும் வகையில், தயாரிப்பாளர் சங்கம் இளையராஜா 75 என்ற பிரமாண்டமான இசைவிழாவை நடத்த முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளது.
இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கம் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,
1000 திரைப்படங்களுக்கு மேலும், 5000-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்தும், 500-க்கும் மேற்பட்ட பாடல்களை தனது சொந்த குரலில் பாடியும் 5-முறை தேசிய விருதுகளை பெற்று திரையுலகில் இன்றும் மாபெரும் சாதனை படைத்துக்கொண்டிருக்கும் இசைஞானி இளையராஜாவுக்கு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக இசையராஜா-75 என்ற பெயரில் அவரை கௌரவிக்கும் பொருட்டு இந்திய அளவில் பிரம்மாண்டமான இசைவிழாவை வெகு சிறப்பாக நடத்த இருக்கிறார்கள்.
மேற்படி விழாவானது, 2019-பிப்ரவரி மாதம் 2 மற்றும் 3ம் தேதிகளில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட திரையுலகில் உள்ள அனைத்து முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இளையராஜாவுடன் பணிபுரிந்த இயக்குனர்கள், இசை கலைஞர்கள் பங்கு பெற்று அவருக்கு பெருமை சேர்க்க இருக்கிறார்கள்.
எனவே பிப்ரவரி 2 மற்றும் 3 தேதிகளில் அனைத்து படப்பிடிப்புகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு தமிழ்த் திரையுலகில் சார்பாக அனைவரும் கலந்துகொண்டு விழாவை சிறப்பிக்க வேண்டும் என்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.
English Summary
producer council announced about function for ilayaraja