சுய தனிமைப்படுத்துதலை 'அதற்கு' பயன்படுத்தப் போகிறோம்! முன்னணி நடிகை பகிரங்க பேச்சு!!
Priyanka chopra says about self quarantine
உலகத்தையே நடுங்க வைத்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது. உலகளவில் லட்சக்கணக்கானோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்தியாவில் ஆயிரம் பேர் இந்த வைரஸின் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளனர். 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் இந்திய பிரதமர் மோடி மோடியின் உத்தரவுபடி மக்கள் அனைவரும் ஊரடங்கின் கீழ் வீட்டிற்குள் முடங்கியுள்ளன. இதனை தொடர்ந்து, பொழுதுபோக்காக சினிமா நடிகர், நடிகைகள் அவர்களது வீட்டில் இந்த நேரத்தை எப்படி செலவிடுகிறார்கள்? என்பதை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் விஜயுடன் 'தமிழன்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான பிரியங்கா சோப்ரா, தற்போது ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா ஹாலிவுட், பாலிவுட் என்று நடித்து முன்னணி நடிகையாகி உள்ளார். இவர் பிரபல பாடகர் 'நிக் ஜோனஸ்' என்பவரை சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
இவர் தற்போது வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், ' கொரோனா வைரஸால் உண்டான இந்த சுய தனிமைப்படுத்தல் எங்களுக்கு கடவுள் கொடுத்த வரம் என்று கருதுகிறேன். அதாவது நானும் என் கணவரும் வேலையில் கவனம் செலுத்தி வந்த காரணத்தினால் எங்களால் இல்லற வாழ்க்கையில் அதிகம் ஈடுபட முடியவில்லை. எனவே அதற்கான சரியான நேரம் இதுதான். மேலும், எங்களுக்கு குடும்ப ஆசை வருவதற்கு இந்த சுய தனிமைப்படுத்தலும் ஒரு காரணம் என்று அதில் தெரிவித்துள்ளார்.
English Summary
Priyanka chopra says about self quarantine