ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுத்த அஜித் பட நடிகை.!
parvathy nair about rumours
நடிகை பார்வதி நாயர் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒரு அதிரடி புகார் கொடுத்தார். அதில் தனது வீட்டில் பணிபுரிந்து வந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சுபாஷ் சந்திர போஸ் என்பவர் கடந்த அக்டோபர் 20 வீட்டிலிருந்த ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரு கை கடிகாரங்கள், ஐபோன், லேப்டாப் உள்ளிட்டவற்றை திருடி சென்றதாக தெரிவித்து இருந்தார்.
இதை அடுத்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் சுபாஷ் சந்திர போஸ் ஒரு பரபரப்பு புகாரை கொடுத்துள்ளார். அதில், "நான் தான் பார்வதி நாயர் வீட்டில் பணிபுரிந்து வந்தேன். என்னை அவர் அடித்து துன்புறுத்தி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினார். என் மீது தேவையில்லாத திருட்டு பட்டத்தை சுமத்தியுள்ளார்.
இரவு நேரங்களில் தனது ஆண் நண்பர்களுடன் பார்வதி நாயர் மது விருந்து நடத்தி நெருக்கமாக இருந்தார். அதை நான் பார்த்ததால் என் மீது கோபம் ஏற்பட்டு அதை நான் வெளியில் கூறி விடுவேன் என்ற பயத்தில் என்னிடம் அநாகரிகமாக நடந்து வந்தார். என்னை துன்புறுத்தி என் மீது எச்சில் துப்பினார். ஆட்களை ஏவி அடித்தார்." என்று தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், தற்போது நடிகை பார்வதி நாயர் தரப்பில் இருந்து வெளியாகியுள்ள அறிவிப்பில். "தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக ஊடகங்கள் செய்திகளை பரப்பினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
parvathy nair about rumours