அட்லீ செத்த வாயவச்சிகிட்டு சும்மா இருப்பா..! பனிமலர் போட்ட ட்வீட்டால்..சர்ச்சை.!  - Seithipunal
Seithipunal


ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் இயக்குநர் அட்லி. இதற்கு முன்னாள் பிரபல இயக்குனர் ஷங்கருடன் இணைந்து நண்பன், எந்திரன் போன்ற படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். 

மேலும், முகப்புத்தகம் என்ற குறும்படத்தை இயக்கி புகழ் பெற்ற நிலையில் ராஜா ராணியை தொடர்ந்து விஜய்யுடன் இணைந்து தெறி, மெர்சல் சமீபத்தில் வெளிவந்த பிகில் உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கினார். தற்போது ஷாருக்கானை வைத்து புதிய படம் எடுக்கப் போவதாகவும் சில தகவல்கள் வெளியாகி வருகின்றது.

atlee seithipunal

அட்லியின் படங்கள் வெற்றி பெற்ற போதிலும் அவர் படம் காப்பியடிக்கப்பட்டது என்ற விமர்சனங்கள் எப்பொழுதும் கிளம்பி வரும். பிகில் படத்திலும் கூட அவ்வாறே விமர்சனங்கள் வெளிவந்தது. அட்லீ பிகில் பட ஆடியோ வெளியீட்டு விழாவில், "விஜய் என் அண்ணன். அவருக்காக நான் எல்லாவற்றையும் நன்றாக செய்வேன்." என பேசி இருந்தார்.

ஆனால், படம் வெளியான பின்னர் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றது. இந்த நிலையில் செய்தி தொகுப்பாளராக இருந்த பனிமலர் அட்லீ குறித்து, "அவர் வாயை வைத்துக்கொண்டு சும்மா இருந்தாலே போதும். இவ்வளவு வெறுப்பை சம்பாதித்து இருக்க மாட்டார்." என ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். தற்போது, இந்த சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

panimalar tweet about atlee


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->