பலநாள் எதிர்பார்ப்புகளுக்கிடையே ஓகே சொன்ன நயன்தாரா.! குஷியான விக்னேஷ் சிவன்.! எதற்கு தெரியுமா?
nayanthara encagement will happened soon
தமிழ் சினிமாவில் விஜய், அஜித், ரஜினி, சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்துள்ளார். மேலும் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான விஸ்வாசம் படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இவ்வாறு பல ரசிகர்களின் கனவு கன்னியாக விளங்கும் நயன்தாரா நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்ததில் இருந்து அதன் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். மேலும் 4 வருடங்களாக காதலித்து வரும் இருவரும் ஒன்றாக ஜோடி சேர்ந்து அடிக்கடி ஊர் சுற்றி வருகின்றனர். மேலும் அந்த புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
மேலும் இவர்களுக்கு எப்பொழுது திருமணம் என ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் நயன்தாரா சினிமாவில் மிகவும் பிசியாக இருப்பதால் இருவரும் திருமணத்தை தள்ளிப்போட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் விக்னேஷ் சிவனின் குடும்பத்தினருடன் நயன்தாரா தமிழ் புத்தாண்டை கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலானது.
இந்நிலையில் அப்பொழுது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் குறித்து பேசப்பட்டதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் நிச்சயதார்த்தம் செய்துகொள்ள நயன்தாரா சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இதனால் விக்னேஷ் சிவன் மிகவும் உற்சாகத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
English Summary
nayanthara encagement will happened soon