#வீடியோ: ஓணம் பண்டிகையை நயன்தாரா, யாரோடு கொண்டாடினார் தெரியுமா.!
nayanthara celebrates onam on kochin
தமிழ் திரையுலகில் சமீபகால ஹாட் காதல் ஜோடிகள் என்றால் அது விக்னேஷ் சிவன் நயன்தாரா ஜோடி தான். இவர்கள் இருவரும் காதலிப்பது மட்டுமல்லாமல், சேர்ந்து அடிக்கும் லூட்டிகள் அனைத்தும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும். எப்பொழுதும் இருவரும் சேர்ந்து செய்யும் அலப்பறைகளை பார்க்கும் இணையதளப் வாசிகள் பலரும் சிங்கிள் சாபம் உங்கள சும்மா விடாது என்று செல்லமாக கோபித்துக் கொள்வது வழக்கம்.
அந்த அளவிற்கு இந்த ஜோடியின் லூட்டிகள் அதிகமாக இருக்கும். இருப்பினும், இவர்கள் திருமணம் குறித்த தகவல்களை வெளியிடாமல் கமுக்கமாக இருக்கின்றனர். மேலும், கோலிவுட்டில் இருவரும் ஒரே வீட்டில் லிவிங் டுகெதர் முறையில் வசிப்பதாகவும் கிசுகிசுத்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக தனது காதலன் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து பல்வேறு கோவில்களுக்கு வழிபாட்டிற்கு சென்று வந்தார். இதற்கிடையில், கொரோனா காரணமாக ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் விக்னேஷ், "எங்களுக்கு காதல் செய்ய எப்போது போர் அடிக்கிறதோ? அப்போது தான் இருவரும் திருமணம் செய்து கொள்வோம்." என்று தெரிவித்து இருந்தார்.
ஒவ்வொரு வருடமும் நடிகை நயன்தாரா தனது குடும்பத்தோடு ஓணம் பண்டிகையை கொண்டாடுவார். ஆனால், இந்த வருடம் தனது காதலன் விக்னேஷ்சிவனோடு ஓணம் கொண்டாட தனி விமானத்தில் கொச்சிக்கு சென்றுள்ளார். அங்கு இருவரும் அறுசுவை கேரளா உணவுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். தன் கையாலேயே சமைத்து விக்னேஷ் சிவனுக்கு அவர் பரிமாற அதனை சாப்பிட்ட விக்னேஷ் சிவன் அருமையாக உள்ளது என்று பாராட்ட, அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
English Summary
nayanthara celebrates onam on kochin