துணை முதல்வரை சந்தித்த முக்கிய நடிகர்!! வெளியானது காரணம்!!
nasar meet ops
தொடர்ந்து பல்வேறு தடைகளால் நிறுத்தப்பட்ட தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை, திட்டமிட்டபடி வருகின்ற 23-ஆம் தேதி நடத்தலாம் என்று, நடிகர் விஷால் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதில் திட்டமிட்டபடி தேர்தலை நடத்தலாம், ஆனால் வாக்குகளை எண்ணக் கூடாது எனவும், நீதிபதி மறு உத்தரவு வரும் வரை தேர்தல் முடிவுகளை வெளியிடக் கூடாது எனவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். விசாரணை முடியும் வரை வாக்குப் பெட்டிகளை பாதுகாப்பாக வைத்திருக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் வழக்கு விசாரணையை ஜூலை 8-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுருந்தது
இந்தநிலையில், சென்னை தலைமை செயலகத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்துடன், பாண்டவர் அணியை சேர்ந்த நாசர், ராஜேஷ், லதா, சச்சு உள்ளிட்டோர் சந்திப்பு. நாளை நடக்கும் நடிகர் சங்க தேர்தல் நியாயமாக நடைபெறவும், உரிய பாதுகாப்பு அளிக்கவும் துணை முதல்வரிடம் வலியுறுத்தல்.