32 ஆண்டுகள்.. ரஜினியுடன் நினைவுகளை அசைபோட்ட நதியா..! சுவாரஸ்யத்துடன் வெளியிட்ட புகைப்படம்.!
nadhiya remember her memories with rajini
ராஜாதி ராஜா படப்பிடிப்பு நடைபெற்ற பொழுது நடிகர் ரஜினிகாந்த்துடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை நடிகை நதியா தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
கோலிவுட் சினிமாவில் 1980களில் மிக முக்கிய நடிகையாக வலம் வந்தவர் நதியா. தனது இயல்பான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். தற்போதைய இளைஞர்களிடம் கேட்டால் கூட நதியா தனக்கு மிகவும் பிடித்த நடிகை என்றுதான் கூறுவர்.
தமிழ் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் மலையாள திரைப்படங்கள் பலவற்றிலும் முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்து அசத்தி இருக்கிறார். இவர் நடிக்கும் பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி படமாகத்தான் இருக்கும். திருமணம் செய்து கொண்டவர் தன்னுடைய வாழ்க்கையில் கவனம் செலுத்த துவங்கினார்.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி திரைப்படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்தார். ஒரு சில திரைப்படங்களில் அவர் நடித்து வருகின்றார்.
ராஜாதி ராஜா படப்பிடிப்பு நடைபெற்ற பொழுது நடிகர் ரஜினிகாந்த்துடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை நடிகை நதியா தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு 32 ஆண்டுகள் ஆகிவிட்டது நம்பவே முடியவில்லை காலம் எவ்வளவு வேகமாக சுழல்கிறது நினைவுகள் மட்டும் மாறாமல் இருக்கிறது என்று ட்வீட் செய்துள்ளார்.
English Summary
nadhiya remember her memories with rajini