கணவன் உயிரிழந்தநிலையில், குழந்தைகளை கொன்று விட்டு தாய் செய்த காரியம்! வீட்டுக்கு வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி !!
mother killed children for money problem
சென்னை மதுரவாயலில் வசித்து வருபவர் சிபிராஜ். இவர் தனது முதல் மனைவியை பிரிந்தநிலையில் சைலஜா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஆதிதேஷ், ஸ்ரீ லட்சுமி என இரு பிள்ளைகள் உள்ளனர்.
கேரளாவை பூர்வீகமாக கொண்ட சிபிராஜ் சினிமா மற்றும் பிற தனியார் நிறுவனங்களுக்கு பைனான்ஸ் வாங்கி கொடுத்து அதன் மூலம் கமிஷனாக கிடைக்கும் பணத்தைக் கொண்டு வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த சிபிராஜ் சிகிச்சை பலனின்றி கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார்.
இந்நிலையில் கணவரின் இழப்பை தொடர்ந்து தனது இரு குழந்தைகளுடன் தனியாக வைத்துக்கொண்டு சைலஜா மிகவும் சிரமப்பட்டுள்ளார். மேலும் அவரது கணவர் வாங்கிய கடனும் இவரது தலையில் ஏறிய நிலையில் அவர் மிகுந்த வேதனையில் இருந்துள்ளார்.
இந்நிலையில் தனது நிலை குறித்தும், கணவரின் கடன் தொல்லை குறித்தும் சைலஜா , சிபிராஜின் முதல் மனைவியிடம் கூறியுள்ளார். உடனே அவரும் தம்பியை அனுப்பி வைக்கின்றேன். குழந்தைகளை அழைத்துக்கொண்டு கேரளாவுக்கு வந்து விடு என கூறியுள்ளார்.
இருப்பினும் மிகுந்த மனவேதனையில் இருந்த சைலஜா கடன் தொல்லையோடு வாழ்வதற்கு தற்கொலை செய்து கொள்ளலாம் என எண்ணி குளிர்பானத்தில் விஷம் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்து கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்துள்ளார். இந்நிலையில் சைலஜா மற்றும் அவரது குழந்தைகளை அழைத்து செல்ல வந்த உறவினர் நீண்ட நேரம் கதவை தட்டிய நிலையில், சைலஜா திறக்காததால் சந்தேகம் அடைந்த அவர் ஜன்னல் வழியே பார்த்துள்ளார்.அப்போது சைலஜா மற்றும் குழந்தைகள் படுக்கையில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துவிட்டு, வீட்டை உடைத்து உள்ளே சென்று மயங்கிய நிலையில் கிடந்த அனைவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்டுவர்கள் குழந்தைகள் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர் மேலும் சைலஜா தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். கடன் தொல்லையால் தனது குழந்தைகளை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
mother killed children for money problem