பிக்பாஸ் அபிராமிக்கு, வாழ்க்கை கொடுத்ததே நான் தான்! பிக்பாஸ் பிரபலம் ட்வீட்!! திட்டி தீர்க்கும் ரசிகர்கள்!! - Seithipunal
Seithipunal


பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி போட்டியில், அதிக வாக்குகளை பெற்று முகேன் ராவ் பிக்பாஸ் சீசன் 3 பட்டத்தை வென்று 50 லட்சம் பரிசு தொகையையும் கைப்பற்றினர். இரண்டாம் இடத்தை சாண்டி பிடித்தார். மூன்று இடத்தை லாஷ்லியா கைப்பற்றினர்.

மேலும் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டவர் நடிகை அபிராமி. இவர் வீட்டிற்குள் நுழைந்த சிலநாட்களிலேயே கவின், முகேன் என காதல் சர்ச்சைகளில் சிக்கினார். இதனைத் தொடர்ந்து அவர் குறைந்த வாக்குகளைப் பெற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

அதில் 16 போட்டியாளர்களுள் ஒருவர் மீரா மிதுன். இவர் வீட்டிற்குள் நுழையும்போதே அபிராமி மற்றும் சாக்‌ஷி இவரை ஒதுக்க ஆரம்பித்து விட்டனர். அதுமட்டுமின்றி வீட்டிற்குள் இவர்கள் மூவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்தது. அந்த சண்டை வீட்டை விட்டு வெளியேறிய பிறகு நடந்து வருகிறது.

இந்நிலையில், மீரா மிதுன் தனது டிவிட்டர் பக்கத்தில் அபிராமிக்கு வாழ்க்கை கொடுத்ததே நான் தான் என்றும் என் ரசிகர் பட்டாளத்தை நீங்கள் அறிவீர்கள் என்று நான் நம்புகிறேன் என பதிவு செய்துள்ளார். இதனால் சர்ச்சை ஏற்பட்டு அபிராமி ரசிகர்கள் மீரா மிதுனை திட்டி தீர்த்து வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

meera mitun tweet about adhirami


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->