சாதி கலவரத்தை தூண்டுகிறது.! எழுந்த புகார்..! தடை விதிக்கப்படுகிறதா..?! சர்ச்சைக்குரிய படம்.!  - Seithipunal
Seithipunal


நெல்லை காவல் நிலையத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வருகின்ற கர்ணன் படத்திற்கு கலவரத்தை தூண்டுவதாக கூறி தடை விதிக்க வேண்டும் என்று புகார் அளிக்கப்பட்டு இருக்கின்றது. 

தென் தமிழகத்தில் இருக்கும் சாதிய பாகுபாடுகளை பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் வெளி காட்டியதற்காக மாரி செல்வராஜ் பாராட்டப்பட்டார். 

தற்போது இவர் தனுஷ் நடித்து வரும் கர்ணன் என்ற படத்தை உருவாக்கி வருகின்றார். இந்த நிலையில் இதற்கான படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தமிழ்நாடு முக்குலதோர் புலிப்படையினர், நெல்லை மாநகர காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்து இருக்கின்றார்.

அந்த புகாரில், ”1991ம் ஆண்டில் நடந்த கொடியன்குளம் மணியாச்சி சாதி கலவரத்தை மையப்படுத்தி தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கும் ‘கர்ணன்’ படத்திற்கு தடை விதிக்க வேண்டும். தென்னகத்தில் அமைதியான சூழல் நிலவி வரும் நிலையில் இந்த படம் சாதிய கலவரங்களை தூண்டும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிகிறது. மேலும், மணியாச்சி காவல் நிலையத்தை தாக்குவது போன்ற காட்சிகள் படமாக்கப்படுகின்றன. இது காவல்துறையின் கண்ணியத்தை கெடுப்பதாக உள்ளது “ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mari selvaraj movie may stop


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->