சிம்புவின் படத்தில் நடிகராகும் கவிஞர் மனுஷ்யபுத்திரன்.! அடுத்தடுத்த அறிவிப்பால் ரசிகர்கள் ஜரூர்.!
manushyaputhiran in simbu movie
ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துடைய 20வது திரைப்படமான "பத்து தல" படத்தில் நடிகர் சிம்பு மற்றும் கவுதம் கார்த்திக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா தான் இந்த படத்தையும் இயக்குகிறார்.
கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி 10 மணிக்கு இந்த படத்துடைய டைட்டில் "பத்து தல" என்று போஸ்டருடன் வெளியாகியது. முப்தி எனும் கன்னட படத்தின் ரீமேக் படமான இதன் படப்பிடிப்பு வருகின்ற பிப்ரவரி மாதம் துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
டைட்டிலிலேயே தல என்ற பெயரில் வைக்கப்பட்டு இருப்பதால் இந்த படத்தில் நல்ல ரெஃப்ரன்ஸ் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கவுதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக நடிப்பார் என்று கூறப்பட்டது. இதில், கதைப்படி சிம்புவுக்கு ஜோடி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், அசுரன் படத்தில் தனுஷின் மகனாக நடித்த டீஜே அருணாச்சலம், 'பத்து தல' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியது.
இந்நிலையில், தற்போது கவிஞர் மனுஷ்யபுத்திரன் பத்து தல படத்தில் இணைந்துள்ளார். இதுகுறித்து இயக்குனர் கிருஷ்ணா, "தமிழகத்தின் இலக்கிய ஆளுமை கவிஞர் மனுஷ்யபுத்திரன் மற்றும் டிஜே அருணாச்சலம் அவர்களை எங்கள் தளத்திற்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். மனுஷ்ய புத்திரனின் கவிதைத் திறமையும், இலக்கிய திறமையும் மிகவும் பிரசித்தி பெற்றது.
இந்த படத்தில் சமூக சேவகர் உதயமூர்த்தி என்ற கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார். நிறைய நேர்மைறைத் தன்மை கொண்ட படத்தின் கதையில் அழுத்தம் தரும் மிகவும் முக்கிய கதாபாத்திரம் அவர் நடிக்க இருப்பது." என்று கூறியுள்ளார்.
English Summary
manushyaputhiran in simbu movie