அவரோட பெயரை சொல்ல என்ன பயம்.. மன்சூர் அலிகான் அதிரடி பரபரப்பு பேச்சு.!!
mansoor alikhan directly says and warn rajinikanth
கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக நடைபெற்று முடிந்த இந்திய நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர்கட்சியின் சார்பாக நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிட்டார். இவர் திண்டுக்கல் மக்களவை தொகுதியில் களம்கண்டார்.
இவர் நடிகர் மற்றும் அரசியவாதியாக விளங்கி வரும் நிலையில், நாடாளுமன்ற தேர்தலின் போது 50 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றிருந்தார். இந்நிலையில், சமீபத்தில் திரைத்துறை தயாரிப்பாளர்கள் ஒன்று சேர்ந்து, பெரிய கதாநாயகர்களின் படத்தை பண்டிகை காலத்தில் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.
மேலும், சிறிய தொகையில் உருவான படங்கள் இலாபம் பார்க்கும் வகையில் பிற கதாநாயகர்கள் மற்றும் பெரிய தயாரிப்பாளர்கள் உதவி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.
இந்த நேரத்தில், புறநகர் திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பின் போது பேசிய நடிகர் மன்சூர் அலிகான், ரஜினி என்று பெயரை கூறி விஷயத்தை கூறுவதற்கு ஏன் பயம் என்று அனைவரையும் பெரும் பதைபதைப்பிற்கு உள்ளாக்கினார்.
இது தொடர்பாக அவர் பேசிய சமயத்தில், " எனக்கு முன்னதாக பேசிய நபர்கள் அனைவரும் ஏன் பண்டிகை காலத்தில் அவர் படத்தை வெளியிடுகிறார்?. பிற நாட்களில் வெளியிட்டால் என்ன? என்பது போன்று பேசினர்.
அவருடைய பெயரை யாருமே குறிப்பிடவில்லை. ரஜினிகாந்த் என்று வெளிப்படையாக கூறினால் என்ன?.. ரஜினி என்றால் பயமா உங்களுக்கு என்பது எனக்கு தெரியவில்லை. அவர் நன்றாக நடிக்கிறார், வாய்ப்பு வருகிறது. பணமும் அதிகளவு வருகிறது " என்று தனது உரையை முடித்துக்கொண்டார்.
Tamil online news Today News in Tamil
English Summary
mansoor alikhan directly says and warn rajinikanth