நேற்று ரசிகர் மன்றம், இன்று மக்கள் மன்றம், நாளை சட்டமன்றம்.! ரஜினியை தொடர்ந்து விஜய் அதிரடி.!?  - Seithipunal
Seithipunal


விஜய் ரசிகர்கள் மதுரையில் அடித்து ஒட்டி இருக்கின்ற போஸ்டர்கள் தற்போது அனைவருடைய கவனத்தையும் விமர்சனத்தையும் பெற்று வருகின்றது.  

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் வருகைக்காக எதிர்பார்த்து காத்திருந்த அவருடைய ரசிகர்கள் உடல்நிலை காரணமாக அவர் அரசியல் கட்சி துவங்கவில்லை என கூறியதும், மிகுந்த ஏமாற்றமும், அதிர்ச்சியும் அடைந்தனர். வேறு வழியின்றி உங்களது உடல் நலம் தான் முக்கியம் என்று கூறி மனதை தேற்றிக்கொண்டனர். 

இத்தகைய சூழலில், ரஜினியை தொடர்ந்து விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் எதிர்ப்பார்த்து பல வருடங்களாக காத்துகிடக்கின்றனர். இருப்பினும், தளபதியே இது குறித்து எதுவுமே பொதுவெளியில் பேசுவதில்லை. அவருடைய தந்தை சமீபத்தில் கட்சி ஆரம்பித்து வெலவெலத்து போன கதையெல்லாம் ஒருபக்கம் இருக்கின்றது. 


 
இந்நிலையில், விஜய் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் உடன் இருப்பது போல மதுரையில் "தளபதி வந்தால் தமிழகம் அமெரிக்கா, நேற்று ரசிகர் மன்றம், இன்று மக்கள் மன்றம், நாளை சட்டமன்றம்." என்று ரைமிங்காக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருக்கின்றது. இது அனைவரது கவனத்தையும் தற்போது பெற்று வருகின்றது. 

இப்படி போஸ்டர் ஒட்டியாவது அவரை அரசியலுக்கு அழைத்து வர வேண்டும் என ரசிகர்கள் ஆசை கொள்கின்றனர். அவர்களது ஆசையை விஜய் நிறைவேற்றுவாரா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

madurai vijay fans poster about assembly election


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->