பிக்பாஸ் வீட்டில் நடப்பது இதுதான்.! மதுமிதா வெளியிட்ட புதிய வீடியோ!! - Seithipunal
Seithipunal


பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். தற்போது கவின், லொஸ்லியா, சாண்டி, ஷெரின், முகென், தர்சன், வனிதா, சேரன் ஆகியோர் மட்டுமே உள்ளனர்.

மிகவும் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயற்சி செய்ததாக கூறி வெளியேற்றப்பட்டவர் நடிகை மதுமிதா. அதனை தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கிய அவர் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் தனக்கு பிக்பாஸ் வீட்டில் நடந்த கொடுமை, மற்றும் சில போட்டியாளர்கள் குறித்து சில கருத்துக்களை கூறினார்.
 
இந்நிலையில், மதுமிதா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மதுமிதா அன்றைக்கு செய்தியாளர் சந்திப்பில் நான் பேசிய விசயங்கள் அனைத்தும் உண்மை. பொதுவாகவே பிக்பாஸ் வீட்டிற்குள் செல்பவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவது வழக்கம். எனக்கு நடந்த சில விஷயங்களால் என் மன அழுத்தம் மேலும் அதிகரித்தது. அதனால் அன்று சற்று உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன் என்று கூறினார்.

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி வீட்டிற்கு வந்தபிறகும் 20 நாட்கள் அதன் தாக்கம் எனக்குள் இருந்தது. அந்த சூழ்நிலையில் முதன்முறையாக மக்களைச் சந்தித்து பேசப்போகிறேன் என்றதும், என்னை அறியாமல் எனக்குள் இருந்த விசயங்கள் எல்லாம் வெளியில் வந்துவிட்டது. இப்போது நன்றாகவே குணமடைந்து வருகிறேன். மனதளவில் இன்னமும் கொஞ்சம் பாதிப்பு இருக்கிறது விரைவில் அதுவும் சரியாகி விடும் என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

madhumitha new video release


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->