பிக்பாஸ் இறுதி நிகழ்ச்சியில் ஏன் கலந்து கொள்ளவில்லை! முதல் முறையாக விளக்கம் அளித்த மதுமிதா கணவன்!!
madhumitha husband says bigg boss 3 final
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி போட்டியில், அதிக வாக்குகளை பெற்று முகேன் ராவ் பிக்பாஸ் சீசன் 3 பட்டத்தை வென்று 50 லட்சம் பரிசு தொகையையும் கைப்பற்றினர். இரண்டாம் இடத்தை சாண்டி பிடித்தார். மூன்று இடத்தை லாஷ்லியா கைப்பற்றினர்.
பிக்பாஸ் சீசன் 3 இறுதி நாள் நிகழ்ச்சியில், சரவணன் மற்றும் மதுமிதா ஆகிய 2 பேரும் கலந்துகொள்ள வில்லை. பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சு காரணமாக, பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டவர் சரவணன். அதுபோல, பிக்பாஸ் வீட்டில் சக போட்டியாளர்களுடன் நடைபெற்ற வாக்குவாதம் ஒன்றில் தன் கையை அறுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் மதுமிதா.
இந்நிலையில், இறுதிநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள எங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று மதுமிதா கணவர் மோசஸ் கூறினார். தான் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி போட்டியில் கலந்துகொண்டதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்து மோசஸ் வீடியோ ஒன்றை அவரது ட்வீட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
அந்த வீடியோவில் பிக்பாஸ் 3 இறுதி போட்டி சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் நானோ மதுமிதாவோ என் குடும்பத்தார் யாரும் கலந்துகொள்ள வில்லை. ஏன் என்றால் எங்களை அழைக்கவில்லை என்று தெரிவித்து இருந்தார்.
English Summary
madhumitha husband says bigg boss 3 final