சினிமாத்துறையினருக்காக களமிறங்கிய குஷ்பூ.! காதில் வாங்குவாரா எடப்பாடி.?!
kushboo request to edappadi about cinema
பிரபல ஆடை வடிவமைப்பாளராக உள்ள சாய் தயாரித்திருக்கும் படம் மாயத்திரை. இந்த படத்தில் ஷீலா ராஜ்குமார், சாந்தினி, அசோக் ஆகியோர் நடித்திருக்கின்றனர். இயக்குனர் சம்பத்குமார் இயக்கிய இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பு, "நான் இங்கு அரசியல் பேச மாட்டேன். சினிமா குறித்து தான் முழுக்க முழுக்க பேசப்போகிறேன். ஆடை வடிவமைப்பாளராக எனக்கு பணியாற்றிய சாய் படம் தயாரிக்கப் போகிறேன் என்று கூறியதும் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் கவனம் என்று நான் அறிவுரை வழங்கினேன். ஆனால், தற்போது நஷ்டமில்லை என்று அவர் கூறினார்.
பலரும் சினிமாவை தவறான கண்ணோட்டத்தில் தான் பார்க்கின்றனர். என்னை என்னுடன் பணியாற்றிய இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என்று அனைவரும் பத்திரமாக பார்த்துக் கொண்டனர். தமிழ் லைட்மேன் மற்றும் டான்ஸர் மூலமாக தான் கற்றுக்கொண்டேன்.
டாஸ்மாக்கை 100% திறந்திருப்பது போல, சினிமா தியேட்டர்களிலும் 100 சதவீத பார்வையாளர்களோடு இயக்க அனுமதி வழங்கவேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கேட்டுக்கொள்கிறேன். அப்போதுதான் திரைத்துறை நன்றாக வளரவும், நிம்மதியாக இருக்கவும் வாய்ப்பு கிடைக்கும்.
அனைத்து விதிமுறைகளையும் சினிமா துறையினர் கடைபிடிக்கின்றனர். தயாரிப்பாளர் சங்கத்தினர் சினிமா துறையில் பிரச்சனைகள் எழும்போது சிறிய பட தயாரிப்பாளர்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும். அந்த பிரச்சினைகளை உடனே தீர்த்துவிட வேண்டும்." என்று குஷ்பு பேசியுள்ளார்.
English Summary
kushboo request to edappadi about cinema