இவ தான் என் 'சக்காளத்தி'! பொதுமேடையில் போட்டுடைத்த நடிகை குஷ்பு!
kushboo about sundar c
சுந்தர். சி தயாரிப்பில், அறிமுக இயக்குனர் ராணா இயக்கிய படம் 'நான் சிரித்தால்' இதில் நடிகர் ஹிப்ஹாப் ஆதி நடித்திருப்பார். கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியான இந்தப் படம் பலவகையான விமர்சனங்களை பெற்றது.
இந்த படத்தின் விழாவானது நேற்று நடைபெற்றது. அப்போது இந்த விழாவில் தயாரிப்பாளர்களான குஷ்பூ, சுந்தர் சி, நடிகர் ஆதி, ரவிமரியா, என்று படத்தில் நடித்தவர்கள் கலந்துகொண்டார்கள்.
அப்போது நடிகை குஷ்பு இந்த விழாவில் பேசிய போது, "என்னுடைய சக்காளத்தி யாருன்னா அது ஆதி தான். இரவில் நான் தூக்கத்திலிருந்து எழுந்து பார்க்கும்போது ஆதியுடன் தான் பேசிக்கொண்டு இருப்பார் என்று கூறியுள்ளார். இவரது இந்த வேடிக்கையான பேச்சால் அரங்கத்தில் சிரிப்பொலிகள் எழுந்தது.