கோவை : நடந்து கொண்டு இருந்த படப்பிடிப்பு நிறுத்தம்., போலீசார் அதிரடி.!
kovai cinema shooting stopped
கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அருகே அனுமதியின்றி சினிமா படப்பிடிப்பு நடத்த கொண்டிருப்பதை போலீசார் பாதியிலேயே தடுத்து நிறுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பொள்ளாச்சி அடுத்துள்ள மகாலிங்கபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் ரோந்து பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மகாலிங்கபுரம் நுழைவாயில் பகுதியில் போலீஸ் என்று எழுதப்பட்டு சைரன் வைத்த வாகனம் நின்று கொண்டு இருந்தது.
இதனை பார்த்த எஸ்ஐ கௌதம் மற்றும் போலீசார் 'உயர் போலீஸ் உயர் அதிகாரிகள் வாகனம் வந்துள்ளது., உயரதிகாரிகள் எதற்காக இங்கு வந்துள்ளார்கள்., எந்த தகவலும் நமக்கு தெரியவில்லையே' என்ற சந்தேக தயக்கத்துடன் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த பகுதியில் சினிமா படப்பிடிப்பு நடப்பதாகவும், அந்த படப்பிடிப்புக்கு தேவையாக இந்த வாகனம் அங்கு நிறுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிய வந்தது.
இதனையடுத்து எஸ்ஐ கௌதம் மற்றும் போலீசார் படக்குழுவினரிடம் விசாரணை மேற்கொண்டனர்., அப்போது புதுமுக இயக்குனர் கார்த்திக் என்பவர் இயக்கத்தில், நடிகர் அசோக் செல்வன் நடிக்கும் பெயரிடப்படாத ஒரு படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருப்பது தெரியவந்தது.
இந்த பகுதியில் படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதி வாங்கப்பட்டதா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டதில், எந்த அனுமதியும் இல்லாமல் படப்பிடிப்பு நடந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அந்த படப்பிடிப்புக்கு தடை விதித்து உத்தரவிட்டனர். போலீசாரின் தடையை படப்பிடிப்பு குழுவினர் பேக்கப் செய்து இடத்தை காலி செய்தனர்.
English Summary
kovai cinema shooting stopped