வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி! பார்ட்னர் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ்!!  - Seithipunal
Seithipunal


மிழ் திரைத் துறையில் முன்னணி நடிகையாக நடித்து வருபவர் கீர்த்தி சுரேஷ். தற்போது இவர் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். சாவித்திரியின் பயோபிக் ஆன நடிகையர் திலகம் எனும் திரைப்படம் இவருக்கு புதிய பரிமாணத்தை கொடுத்தது. 

அந்த படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷின் நடிப்பு அடுத்த கட்டத்திற்கு அவரை எடுத்துச் சென்றது. இதனால் அடுத்தடுத்து அவர் நடிக்கும் படங்களை மிகவும் கவனமாக தேர்வு செய்து வருகிறார். 

இந்தநிலையில் அவர் அவரது வாழ்வின் அடுத்த கட்டமாக அவரது திருமணம் குறித்து முடிவெடுத்துள்ளாராம். இதுகுறித்து பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் தெரிவிக்கையில், பாஜகவுடன் மிகவும் நெருக்கம் உடையவரான கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ் குமார் பாஜக கட்சியை சேர்ந்த கோடீஸ்வர தொழில் அதிபரை கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் செய்து வைக்க இருக்கிறாராம். 

இதற்கு கீர்த்தி சுரேஷும் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கீர்த்தி சுரேஷ் விரைவில் பாஜக தொழிலதிபரை மணந்து கொள்ள இருக்கிறார் என்று தகவல் வெளியாகி வந்தது. 

இந்த நிலையில் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்து கீர்த்தி சுரேஷ் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது செல்ல நாய்க்குட்டி உடன் ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு "with my Quarantine time partner" என்று பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு அவர் குறித்து வருகின்ற திருமண வதந்திகள் இவருக்கு தெரியாதது போலவே கூலாக பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Keerthy Suresh Instagram post


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->