கவினின் கலக்கல் கவிதை.! மூன்றே எழுத்தில் அதிர்ந்து போன அரங்கம்.!!
kavin spoke kavithai
பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியானது தமிழ் மக்களிடையே பெரும் வரவேற்ப்பு பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருந்து வருகிறது.
இந்த நிகழ்ச்சி தற்போது வரை மூன்று சீசன்களை நிறைவு செய்துள்ள நிலையில்., மூன்றாவது சீசனில் போட்டியாளர் முகைன் முதல் இடத்தினை பிடித்து வெற்றி அடைந்தார். மேலும்., பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியிட்டதன் மூலமாக மக்களிடையே பிரபலமானவர் கவின்., லாசலியா.
இவர்கள் இருவருக்கும் என தனியொரு ஆர்மியானது இருந்து வருகிறது. இவர்களுக்குள் இருக்கும் ரசிகர் கூட்டம் இருந்து வரும் நிலையில்., கவின் - லாசலியா இடையே காதல் மலர்ந்துள்ளதாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இவர்களும் அவ்வாறே நடந்து கொண்டனர்.
இந்த நிலையில்., தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சியில் கவின் மற்றும் லாசலியாவிற்கு பிரபலமான நபர்கள் என்று கூறி விருது வழங்கிய நிலையில்., ஆண்களின் பிரிவிற்கு கவினிற்கும்., பெண்கள் பிரிவில் லாசலியாவிற்கும் வழங்கினார். இதனைதொடர்ந்து கவின் வழக்கம் போல தனது மலரும் நினைவுகளை பகிர்ந்தார்.
இது குறித்த பகிர்வில்., பள்ளியில் பயின்ற போது வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கம் வாங்கினேன். நீங்கள் கொடுத்தது தங்க பதக்கம் என்று தெரிவித்தார். இதனையடுத்து தொகுப்பாளர் அம்மாவிற்கு ஒரு கவிதை குறித்து கேள்வி எழுப்பவே., அம்மா என்ற சொல்லே கவிதை தானே என்று கூறி அரங்கத்தை அதிரவைத்தார்.
Tamil online news Today News in Tamil