"அரைவேக்காட்டுத்தனம்" நடிகை கஸ்தூரி அதிரடி விமர்சனம்!!
kasthuri says about social media
டுவிட்டர் வலைத்தளம் போன்ற சமூகவலைதளங்களில் அதிக பேரால் கவனிக்கப்படும் திரைபிரபலங்களில் ஒருவர் நடிகை கஸ்தூரி அரசியல், பெண்ணியம் மற்றும் சமீபகால நிகழ்வுகள் குறித்து தன் மனதில் பட்ட கருத்துகளை வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்வார்.
நடிகை கஸ்தூரி அது போன்ற பதிவுகளை பதிவிடுதுவதால் பல்வேறுவிதமான சிக்கல்களுக்கு மற்றும் கேள்விகளுக்கு ஆளாவார். மேலும், பல நெட்டிசன்கள் மிகவும் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சிப்பதும் உண்டு. சில சமயங்களில் சில கருத்துக்களுக்கு நடிகை கஸ்தூரி நேரடியாக பதில் அளிப்பதும் உண்டு.
இது குறித்து அவர் கூறியிருப்பது, "நான் எப்பொழுதும் மனதில் பட்டதை அப்படியே பேசும் குணம் கொண்டவள். இதிலும் அப்படித்தான் இருப்பேன். எனது கருத்துக்களுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களும் இருக்கிறார்கள், எதிர்ப்பு தெரிவிப்பவர்களும் இருகின்றனர்.
மேலும் சிலர் நீங்கள் சரியாக பேசினீர்கள் என போன் செய்து பாராட்டுவதும் உண்டு. நியாயமான விஷயங்களுக்கு குரல் கொடுப்பேன். எனது குடும்பத்திலும் அப்படித்தான் நடந்து கொள்வேன். நான் நடிகை தானே எனக்கு என்ன தெரியும் என்ற ரீதியில் பலர் கேள்வி கேட்கின்றனர்.
தற்போது ஒரு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளேன். இதில் ஆக்ஷன் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இதன் பிறகு என் மீதான பார்வை பிறருக்கு மாறுபடலாம். சினிமாவில் நடிப்பதை வைத்து ஒருவரின் குணத்தை கணிப்பது அரைவேக்காட்டுத்தனம்" என அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
kasthuri says about social media