சுவாமி சங்கரதாஸ் அணிக்கு பின்னணியில் இவர் உள்ளார்?!  நடிகர் கருணாஸ் பரபரப்பு தகவல்!! - Seithipunal
Seithipunal


தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வருகின்ற 23ம் தேதி, ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் நாசர் தலைமையிலான ‘பாண்டவர்’ அணியும், கே.பாக்யராஜ் தலைமையிலான ‘சுவாமி சங்கர்தாஸ்’ அணியும் போட்டியிடுகின்றனர். 

நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு தர வேண்டும் என விஷால் நேற்று சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தார், ஆனால் போலீஸ் பாதுகாப்பு தர மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து புதுக்கோட்டையில் நடிகர் நாசர், பூச்சி முருகன் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர் அப்போது அவர்கள் கூறியதாவது, நடிகர் சங்க கட்டடத்தில் அனைவருடைய பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதற்காகவே நாங்கள் போராடுகிறோம் எனவும் மேலும் நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு தர போலீஸ் மறுக்கிறது, இதற்கு உள்நோக்கம் உள்ளது. இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என கேள்வி எழுப்பினர். மேலும் இது தொடர்பாக நீதிமன்றத்தை நாட தயாராக உள்ளோம் பாண்டவர் அணி தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், நடிகர் சங்க தேர்தலில் சுவாமி சங்கரதாஸ் அணிக்கு பின்னணியில் ராதாரவி உள்ளார் என பாண்டவர் அணியை சேர்ந்த நடிகர் கருணாஸ் புதுக்கோட்டையில் பேட்தியளித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karunas tell about actors chamber election


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->