மும்பையை கதறவிடும் கங்கனா ரனாவத்! இன்று மாலை நடக்க போகும் நிகழ்வு! பரபரப்பு செய்தி!  - Seithipunal
Seithipunal


நடிகை கங்கனா ரனாவத் பாஜகவில் அல்லது இந்திய குடியரசு கட்சியில் இணைந்தால், அதனை மனதார வரவேற்போம் என்று இந்திய குடியரசு கட்சியின் தலைவரும், மத்திய அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

மும்பை குறித்து நடிகை கங்கனா ரனாவத் கடுமையாக விமர்சித்திருந்தார். இதனால் மும்பை மாநகராட்சிக்கும், நடிகை கங்கனாக்கும் இடையே போரே நடந்து வருகிறது. நேற்று கங்கனா ரனாவத் வீட்டை மாநகராட்சி அதிகாரிகள், விதிகளை மீறி கட்டி உள்ளதாக ஒரு பகுதியை இடித்து தள்ளினர்.

மும்பை மாநகராட்சி இந்த செயலுக்கு எதிராக கங்கனா ரணவத் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம் அவரின் வீட்டை இடிக்க தடை விதித்தது.

இதற்கிடையே, நடிகை கங்கனா ரனாவத்-யை இந்திய குடியரசு கட்சி தலைவரும் மத்திய அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். 

இந்த நிலையில், கங்கனாவின் பங்களா இடிக்கப்பட்டதற்கு ஆளுநர் கோஷியாரி அதிருப்தி தெரிவித்ததுடன், முதலமைச்சர் உத்தவ் தாக்ரேவின் முதன்மை ஆலோசகரைத் தொடர்புகொண்டு இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தி இருந்தார்.

இந்நிலையில், மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷியாரியை இன்று மாலை நடிகை கங்கனா ரனாவத் சந்தித்து பேச உள்ளதாக செய்தி வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kangana meet to governor today


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->