கவலையில் இருக்கும் கமலஹாசன்..! உருக்கமாக போட்ட டிவிட்டர் பதிவு.!
kamal hassan tweet about corona docters
கரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துவரும் நிலையில் போரில் ஆயுதம் இன்றி சண்டையிடும் வீரர்களை போல மருத்துவ வசதிகள் சரிவர செய்யாமல் இருப்பது நியாயமா என நடிகரும் அரசியல் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடு முழுவதும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு போதிய மருத்துவ உபகரணங்கள் மற்றும் கருவிகள் அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. பத்திரிகையாளர்களை சந்திக்கும் அமைச்சர் செயலாளர் போன்றோர் முக கவசத்தை போட்டு இருக்கின்றனர்.
பேஷண்ட்களை கவனிக்க செல்லும் மருத்துவர்களோ சாதாரணமாக கவசத்தை போட்டிருக்கின்றார்கள். இதனால், நோய்த்தொற்று டாக்டர்களுக்கும் பரவும் அபாயம் உள்ளதாக அஞ்சப்படுகிறது. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் இணையதள தனது பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார்.
அதில், "போருக்குச் செல்லும் வீரர்களை ஆயுதம் இல்லாமல் அனுப்புவதை போல நோயாளிகளை சந்திக்கச் செல்லும் மருத்துவர்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை உபகரணங்கள் இல்லாமல் முறையான பாதுகாப்பு இன்றி அனுப்புவது ஞாயமா.? மருத்துவர்களின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்று அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்." என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
English Summary
kamal hassan tweet about corona docters