இந்தியன் 2 படப்பிடிப்பில் காஜலுக்கு ஏற்பட்ட சோதனை.! வெளியான தகவல்.. சோகத்தில் ரசிகர்கள்.!
kajal aggarwal tweet about indian 2 accident
இந்தியன் 2 படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் நடிகர் கமலஹாசன் நடிக்கும் திரைப்படம் இந்தியன் 2. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையை அடுத்த பூந்தமல்லியில் ஈவிபி சினிமா படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த படப்பிடிப்பூக்கள் செட் அமைக்கும் பனியின் போது, கிரேன் அறுந்து விழுந்ததில் 3 ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல 5 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த விபத்து குறித்து காஜல் அகர்வால் தனது ட்வீட்டர் பக்கத்தில், "நேற்றிரவு என் சகாக்களின் எதிர்பாராத, அகால இழப்பில் நான் உணரும் மன வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. கிருஷ்ணா, சந்திரன் மற்றும் மது உங்கள் மூவரின் குடும்பங்களுக்கு அன்பு, வலிமை மற்றும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த பாழடைந்த தருணத்தில் கடவுள் எனக்கு பலம் தருகிறார்.
நேற்றிரவு நடந்த பயங்கரமான கிரேன் விபத்து இவ்வளவு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. உயிரோடு இருந்து இந்த ட்வீட்டைப் பதிவேற்ற ஒரு நொடி மட்டுமே தேவைப்பட்டது. நேரம் மற்றும் உயிரின் மதிப்பு குறித்து அந்த நொடியில் கற்றுக்கொண்டேன்." என்று வருத்தத்துடன் தெரிவித்து இருக்கின்றார். இதை கண்ட அவரின் ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறிவிட்டு தங்களுடைய வருத்தத்தையும் பதிவு செய்து இருக்கின்றனர்.
English Summary
kajal aggarwal tweet about indian 2 accident