இருட்டு அறையில் முரட்டு குத்து 2-ம் பாகம், கதாநாயகி யார் தெரியுமா.?
iruttu araiyil murattu kuthu part 2
சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயங்கிய படம் இருட்டு அறையில் முரட்டு குத்து. இந்த படத்தின் 2-ம் பாகம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியது .
நடிகர், கவுதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்தாண்டு வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. ஆபாசம், இரட்டை அர்த்த வசனங்கள் நிறைந்த இந்த படம், இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
இந்நிலையில், சந்தோஷ் பி ஜெயக்குமார் மீண்டும் ஒரு அடல்ட் காமெடி ஹாரர் படத்தை இயக்க திட்டமிட்டிருந்ததாக தெரிகிறது. அது, இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் 2 ஆம் பாகம் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அதே நடிகர், நடிகைகள் இந்த படத்தில் நடிக்க மாட்டார்கள் என்றும், மாறாக புதுமுக நடிகர், நடிகைகளை தேர்வு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த படம் வரும் 2020 ஆம் ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளதாகவும், இதில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தீபாவளி பின் அறிவிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
English Summary
iruttu araiyil murattu kuthu part 2