#அதிர்ச்சி: சின்னத்திரை நடிகர் தூக்குபோட்டு தற்கொலை.! அதிர்ச்சியில் திரையுலகம்.!
indhirakumar suicide in perambalur
கடந்த சில மாதங்களாகவே சினிமா நடிகர்கள் மற்றும் நடிகைகள் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. சமீபத்தில் சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்டது அவருடைய ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினரை மிகப்பெரிய அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.
இத்தகைய சூழலில், பெரம்பலூரை சேர்ந்த சின்னத்திரை நடிகர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த இந்திரகுமார் என்பவர் நடித்து வந்துள்ளார்.
நேற்று இரவு தனது நண்பர்களுடன் இணைந்து சினிமா பார்த்துவிட்டு நண்பரின் வீட்டில் தூங்கி இருக்கின்றார். இத்தகைய சூழலில், திடீரென்று அதிகாலை அந்த வீட்டில் உள்ள ஒரு அறையில் அவர் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து காவல்துறையினர் தகவல் அறிந்த உடன் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவருக்கு மகன் மற்றும் மனைவி இருப்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
indhirakumar suicide in perambalur