ஆபாசமாக படம் பிடித்து தொல்லைகொடுத்த துணை நடிகர்.! காவல் நிலையத்தில் கதறியழுத துணை நடிகை.!! - Seithipunal
Seithipunal


திரைத்துறையில் பெண்களுக்கு எதிரான அநீதிகள் தொடர்ந்து வருகிறது. நடிப்பதற்காக திரைத்துறையில் அறிமுகமாகும் நடிகைகளை., திரைத்துறையை சார்ந்த நபர்கள் படுக்கைக்கு அழைப்பது தொடர்ந்து கொண்டே வருகிறது. 

சென்னையில் உள்ள வடபழனி ஆற்காடு சாலை பகுதியை சார்ந்தவர் ஜெனிபர் (வயது 24). துணை நடிகையாக பணியாற்றி வரும் இவர்., திரைத்துறை மற்றும் சின்னத்திரை தொடர்கள்., குறும்படங்கள் போன்றவற்றில் நடித்து கொண்டு வருகிறார். 

இந்த நிலையில்., திருவெல்லிக்கேணி பகுதியை சார்ந்த துணை நடிகரின் பெயர் பக்ருதீன். வடபழனியில் உள்ள காவல் நிலையத்தில் ஜெனிபர் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது., திருவெல்லிக்கேணி பகுதியினை சார்ந்த பக்ருதீன்., தன்னை ஆபாச காட்சிப்பதிவு எடுத்து மிரட்டி வருவதாகவும்., பணம் கொடுக்க சொல்லியும்., இல்லையேல் தனது தாயாரை கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். 

sexual harassment, sexual abuse, sexual torture,

இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் பக்ருதீனிடம் மேற்கொண்ட விசாரணையில்., துணை நடிகையான ஜெனிபர் என்னிடமும்., எனது நண்பர்களிடமும் கடன் வாங்கி., ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். நாங்கள் கொடுத்த பணத்தை மீண்டும் கேட்டதற்கு தன் மீது பொய் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  

மேலும்., பக்ருதீனின் பேச்சில் சந்தேகம் அடைந்த காவல் துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையில்., பக்ருதீன் துணை நடிகையை ஆபாசமாக படம் பிடித்து மிரட்டியது அனைத்தும் உறுதியானது. இதனையடுத்து பக்ருதீனை கைது செய்த காவல் துறையினர்., வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Chennai girl sexual harassment by sub actor


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->