திரைப்படத்தில் நடிக்க வைப்பதாக கூறி கேவல புத்தியால் கொடூரத்தை அரங்கேற்றிய தயாரிப்பாளர்.! இறுதியில் அரங்கேறிய துயரம்.!!
in andrapredesh a fake producer miss used young girl when join cine industry
இந்த உலகின் அந்தந்த மொழிகளில் உள்ள பெரும்பாலான திரையுலகில் தங்களை நிலைநாட்டி கொள்வதற்கு பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில்., சில நடிகைகள் தங்களின் உடல் கவர்ச்சியை காட்டி., அதனை புகைப்படங்களாக பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.
இந்த விஷயத்தை பெரும்பாலான நடிகைகள் தங்கள் வசம் திரைப்படம் இல்லாத பட்சத்தில் இது போன்ற ஆபாச புகைப்படங்களை வெளியிடுவதாக திரைத்துறை வட்டாரங்களில் இருந்து பேச்சுக்கள் எழுகிறது. அவ்வாறு பதிவு செய்யப்படும் புகைப்படங்களை காணும் ரசிகர்கள்., சில நேரத்தில் அந்த புகைப்படத்தை பார்த்து வர்ணிப்பதும்., சில ரசிகர்கள் உங்களுக்கு வேற வேலையே இல்லையா? என்று கடுமையான கேள்விகளை எழுப்பி கழுவி ஊற்றுவதும் இணையத்தளத்தில் நடக்கும் கூத்துகளில் ஒன்றாக மாறிவிட்டது.
பல நடிகைகள் தங்களின் உடல் கவர்ச்சியை காட்டி படவாய்ப்புகளை பெற்று வரும் நிலையில் குடும்பத்தை உயர்த்தவும்., மக்களின் மனதில் நீங்காத இடத்தை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் பல இளம் பெண்கள் திரைத்துறைக்கு வருகை தருகின்றனர். அந்த வகையில்., திரைத்துறையில் அறிமுமாகமாகும் பல நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் வழங்கப்படுவதாக தொடர் சர்ச்சைகள் எழுந்துள்ளது.
மேலும்., ஒரு நடிகை வெளிப்படையாக துவங்கிய மீ டூ என்ற ட்விட்டர் ஹேஷ் டேக்குகள் உலகம் முழுவதும் வைரலாகி., இளம் நடிகைகள் அனுபவித்த பல இன்னல்களை வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிலையில்., தெலுங்கு திரையுலகில் நடைபெற்ற அதிர்ச்சி சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. தயாரிப்பாளர் ஒருவர் கடந்த 2016 ம் வருடத்தில் 19 வயதுடைய இளம் பெண்ணிற்கு திரையில் நடிப்பதற்கு படவாய்ப்பு அளிப்பதாக கூறியுள்ளார்.
இதனை நம்பிய பெண் அந்த தயாரிப்பாளரிடம் நடித்து காட்டுவதற்கு சென்று நடித்து காண்பித்துள்ளார். பின்னர் அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தைகளை கூறி., அவரின் ஆடைகளை கலைந்து நிர்வாணமாக காட்சிகளை பதிவு செய்து பல முறை தொடர் பாலியல் வற்புறுத்தலுக்கு உபயோகப்படுத்தி தனது கீழ்த்தர எண்ணத்தை காண்பித்துள்ளார்.
இந்த விஷயத்தை வெளியே சொல்ல முடியாமல் தவித்த வந்த இளம்பெண் தனக்கு தொடர்ந்து அநீதிகள் மட்டுமே இழைக்கப்படுகிறது., ஆபாச புகைப்படத்தை வெளியிட்டு விடுவேன் என்று தொடர்ந்து மிரட்டினால் என்னதான் செய்வது என்று நினைத்து., காவல் நிலையத்தில் புகார் அளித்து விசாரணைக்கு பின்னரே அந்த தயாரிப்பாளர் போலியான நபர் என்பது தெரியவந்தது.
English Summary
in andrapredesh a fake producer miss used young girl when join cine industry