மீடூ சர்ச்சையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பிரபல இயக்குனர்! அதிர்ச்சியில் மூழ்கிய திரையுலகம்!!
famous director suicide by metoo issue
கடந்த சில ஆண்டுகளாக மீடூ விவகாரம் பெரும் சர்ச்சைகளை கிளப்பி வருகிறது. சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி சாதாரண பெண்கள் உட்பட அனைவரும் தங்களது வாழ்க்கையில் நேர்ந்த பாலியல் தொல்லைகளை மீடு என்ற ஹாஸ்டேக்கில் பகிர்ந்து வந்தனர்.
மேலும் இதில் சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலரும் சிக்கினர். மேலும் மீடூ மூலம் பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இவ்வாறு கடந்த 2017 ஆம் ஆண்டு மீடூ விவகாரத்தில் சிக்கியவர் பிரபல ஆவணப்பட இயக்குனர் ஆர்க்ய பாஸு. இவர் கொல்கத்தாவில் சந்தோஷ்பூர் என்ற பகுதியில் வசித்து வருகிறார்.
இவர் தன் மீது அளிக்கப்பட்ட மீடூ விவகாரத்தால் மனவருத்தத்தில் எந்த ஒரு வேலையிலும் ஈடுபடாமல் அவர் தனிமையிலேயே இருந்து வந்துள்ளார். மேலும் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளார். இந்நிலையில் மிகுந்த வேதனையில் இருந்த அவரை குடும்பத்தினர்கள் கவுன்சிலிங் கொடுப்பதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அதனை தொடர்ந்து திரும்பி இயல்புநிலைக்கு திரும்பி, படம் இயக்குவது இல்லாமல். எடிட் செய்வது போன்ற சிறு சிறு வேலைகளை வீட்டிலிருந்தே அவர் செய்து வந்தார்.
இந்நிலையில் கடந்த வாரம் ஆர்க்ய பாஸூ வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது சினிமா திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் அவர் உயிரிழந்ததற்கு அவர் மீது அளிக்கப்பட்ட மீடூ புகார் அளித்ததே காரணம் என கூறியுள்ளனர்.
English Summary
famous director suicide by metoo issue