இரண்டு முறை காதலில் தோல்வி அடைந்தேன்…..! முன்னணி தமிழ் நடிகையின் மனம் திறந்த பேட்டி…..! - Seithipunal
Seithipunal


 

தமிழ் படத்தில், இந்த நடிகை பல படங்களில் நடித்திருந்தாலும், விஜய சேதுபதியுடன் இணைந்து நடித்த பிறகு தான், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானார். பிரபலமானார். முன்னணி கதாநாயகியாக மாறினார்.

தர்மதுரை படத்தில் நடித்த பிறகு, புகழின் உச்சிக்குப் போனார். சமீபத்தில் வெளியான சிவகார்த்திகேயனின், கனா படம், இவரை, மேலும் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. அவர் தான், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

இவர், செய்தியாளர்களிடம் பேசிய போது, “நான் பிளஸ் டூ படிக்கும் போது, ஒரு மாணவனைக் காதலித்தேன். அந்தக் காதலன் பிரிந்து சென்று விட்டான். பின், கல்லுாரியில் படிக்கும் போது, ஒருவரைக் காதலித்தேன்.

அந்தக் காதலும் கை கூடவில்லை. எனக்கும் காதலுக்கும் ராசியே இல்லை.

ஆனாலும், காதல் என்பது, உன்னதமானது. இப்போதும், யாராவது காதலர்களை கண்ணில் பார்த்தால், சற்று பொறாமையாக இருக்கும். பல இடங்களில், இந்த மாதிரி காதலர்களைப் பார்த்து நான் ரசித்திருக்கிறேன்.

எனக்கும் அப்படி எல்லாம் இருக்க வேண்டும், என்று ஆசையாக இருக்கும். ஆனால், நடிகையாக நான் இன்னும் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது.

அதனால், இப்போது, என் நடிப்பை மட்டும் தான் நான் காதலித்துக் கொண்டிருக்கிறேன்” என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

familiar Tamil cinema actress shared her love experience


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->