எங்க படம் உங்களுக்கு எப்படி தெரிகிறது?.. இயக்குனர் ஆர்.கே கண்ணன் அதிரடி பேட்டி.!!
director RK Kannan speech about ivan thanthiram movie
தயாரிப்பாளர், கதையாசிரியர் மற்றும் இயக்குனர் என தனக்குள் பலமுகங்களை கொண்ட இயக்குனர் ஆர்.கே.கண்ணன். இவர் குடும்பம், நகைசுவை, சண்டை போன்ற பல பரிணாமத்தில் திரைத்துறைக்கு தேவையான கதைகளை உருவாக்கி திரைப்படம் எடுத்து வருகிறார். இவர் கடந்த 2008 ஆம் வருடத்தில் வினய் - பாவனா நடிப்பில் வெளியான ஜெயம் கொண்டான் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகினர்.
இதனையடுத்து கண்டேன் காதலை, வந்தான் வென்றேன், சேட்டை, ஒரு ஊர்ல இரண்டு ராஜா, பூமராங், இவன் தந்திரன் போன்ற பல்வேறு திரைப்படங்களையும் எடுத்துள்ளார். இந்த திரைப்படங்களில் சில திரைப்படங்கள் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெறாவிட்டாலும், மாறுபட்ட கதையம்சத்தின் கதையால் ரசிகர்களின் மனதை வென்றவர்.
நடிகர் சந்தானத்தை வைத்து பிஸ்கோத் திரைப்படத்தினை இயங்கிவந்த நிலையில், இந்த திரைப்படம் விரைவில் திரையில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், இவன் தந்திரன் திரைப்படத்தில் ஏற்பட்ட அனுபவம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
இவன் தந்திரம் திரைப்படம் எனது ஒன்றரை வருட உழைப்பாகும்.. இந்த படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்த போதிலும், இப்படம் வெளியான மூன்றாவது நாளில் போராட்டம் துவங்கியது. இதனால் படப்பிடிப்பு இரத்தானது, திரையரங்குகளில் திரைப்படம் ஓடவில்லை.. பெரிய நடிகர்களின் படமென்றால் இப்படி ஆகியிருக்குமா? மூன்றாவது நபரின் படம் என்பதால் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
Tamil online news Today News in Tamil
English Summary
director RK Kannan speech about ivan thanthiram movie