ரஜினியை சந்தித்த கே.எஸ்.ரவிக்குமார்.! பரபரப்பான சினி வட்டாரங்கள்.!! வெளியாகும் தகவல்கள்.!!  - Seithipunal
Seithipunal


திரையுலகின் உச்ச நட்சத்திரமாக இருந்து வரும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் தர்பார் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை லைக்கா ப்ரொடக்ஷன் நிறுவனமானது தயாரித்து வருகிறது. 

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க., கதாநாயகியாக நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளார். மேலும்., திரையுலக பிரபலங்கள் பலர் இந்த திரைப்படத்தில் நடிக்க உள்ளனர். இந்த படத்தின் ஒளிப்பதிவு பணியை சந்தோஷ் சிவன் மேற்கொள்கிறார். 

இந்த படத்தின் முதற்பார்வை நேற்று காலை வெளியான நிலையில்., ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில்., நடிகர் ரஜினிகாந்த் நேற்று மதியம் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.  

தர்பார் படத்தின் படப்பிடிப்பானது மும்பையில் நாளை முதல் துவங்கவுள்ள நிலையில்., மும்பை புறப்பட்டு செல்வதற்கு தயாராகி புறப்பட்டு சென்றார். இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக பிரபல இயக்குனர் மற்றும் நண்பரான இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாரை ரஜினியின் இல்லத்திற்கு சென்று சந்தித்துள்ளார். 

ஏ.ஆர்.முருகதாசின் இயக்கத்திற்கு பின்னர் கே.எஸ்.ரவிகுமாருடன் அடுத்தப்படத்தில் ரஜினி நடிக்கவிருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்த நிலையில்., இவர்கள் இருவரும் தற்போது சந்தித்தது அடுத்த படத்திற்குரிய தகவல்கள் ஏதும் பரிமாறப்பட்டு இருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும்., கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக கே.எஸ்.ரவிக்குமார் ரஜினியை வைத்து லிங்கா படத்தை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

director KS Ravikumar meets rajinikanth next movie discussing


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->